மனத்துக்கண் மாசிலன் ஆதல்.....

மனத்துக்கண் மாசிலன் ஆதல்...


"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற "
                         குறள்  :34

மனத்துக்கண் _ உள்ளத்தில்
மாசிலன் _  குற்றம் இல்லாதவன்
ஆதல்  _  ஆக இருத்தல்
அனைத்து _ எல்லாம்,  அவ்வளவுடையதே
அறன் _ அறம்
ஆகுல _ ஆரவாரம், பகட்டு
நீர _ தன்மை உடையவை
பிற _  மற்றவை எல்லாம்

ஒருவன் தன் மனதில் குற்றம்
இல்லாதவனாக இருத்தல் மட்டுமே அறமாகும்.
மனத்தூய்மை இல்லாத மற்றவை எல்லாம்
வெளிப்பகட்டுத் தன்மை
கொண்ட அறமாகவே கொள்ளப்படும்.

விளக்கம் :

மனத்தின்கண் குற்றம் இல்லாதவனாக
இருத்தல் அறமாகும்.
உள்ளத்தில் குற்றம் நிறைந்தவனாய்
இருந்து ஒருவன் செய்கிற நற்செயலும்
நற் செய்கைகளும் அறம் என்று 
கருதப்பட மாட்டாது.
 உலகம்  மெச்சட்டும் என்பதற்காக
 பலபேர் அறிய 
செய்யப்படும்  நற்செயல்கள்
போலியானவை.

பிறர் அறிய வேண்டும் என்பதற்காக
பல உதவிகளைச் செய்பவர்கள் உண்டு
ஆனால் அவர்கள் உள்ளத்தில் ஒருபோதும் 
நற்சிந்தனை இருந்திருக்காது.
அதனையும் நாங்கள் அறச் செயல்கள் 
செய்கிறோம் என்று விளம்பரப் படுத்திக்
கொள்வர்.

எந்த தர்மம் செய்தாலும் உண்மையான
உள்ளன்போடு செய்யப்பட வேண்டும்.
ஒரு சுயநலத்திற்காகவோ 
விளம்பரத்திற்காகவோ
செய்யப்படும் தான தர்மங்கள
அறத்தின்பாற்படாது 
என்பது வள்ளுவர் கருத்து.
அறம் என்பது சொல்லாலும் செயலாலும்
எண்ணத்தாலும் தூயதாக 
செய்யப்பட வேண்டும். 

English couplet :

"Spotless be thou in mind !This only merits virtue's name.
All else, mere pomp of idle sound,no real worth can claim "

Explanation : 

Let him who does virtuous deeds be of spotless mind; 
to that extent is virtue ;all else is vain show.

Transliteration:

"Manaththukkan Maasilan Aadhal Amarnthaal
Aakula Neera Pira "


 

Comments

Popular Posts