கணைகொடிது யாழ்கோடு செவ்விது....

கணைகொடிது யாழ்கோடு செவ்விது...

"கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கன்ன
வினைபடு பாலால் கொளல் "

                       குறள் :  279

கணை _ அம்பு
கொடிது _ தீயது
யாழ் _ வீணை போன்ற ஒருவகை நரம்பு
              இசைக்கருவி
கோடு _ வளைவு
செவ்விது _ நேரானது
ஆங்கு _ அவ்வகையே
அன்ன _ அது போன்ற
வினைபடு பாலால் _ செய்கைத் திறத்தால்
கொளல் _ அறிந்து கொள்க

நேராகத் தோன்றினாலும் அம்பு கொடியது.
வளைந்திருந்தாலும் யாழ்
இன்னிசை தரக்கூடியது.
அதுபோல மக்களின் பண்புகளை அவர் செய்யும்
செயலால் அறிந்து கொள்க.

விளக்கம் : 

 அம்பு நேராக இருந்தாலும் அது செய்யும்
 செயல் தீயதாகவே இருக்கும்.
 யாழ் வளைந்து காணப்பட்டாலும்
 அதிலிருந்து இன்னிசை மட்டுமே வரும்.
 அதுபோல யாரையும் இருக்கும் தோற்றத்தை
 வைத்து இவர் கொடியவர். இவர் நல்லவர்
என்று முடிவு செய்யக் கூடாது.
நல்லவர் , தீயவர் என்பதை வடிவால்
முடிவு செய்யாமல் அவரவர் செயல்
வகையால்
அறிந்து கொள்ளல்  வேண்டும்
என்கிறார் வள்ளுவர்.

English couplet :

"Cruel is the arrow straight, the crooked lute is sweet,
Judge by their deeds the many forms of men you meet"


Explanation : 

As, in its use, the arrow is crooked, and the curved lute is straight
, So by their deeds( and not by their appearance) let the
uprightness or crookedness of men be estimated.

Transliteration :

"Kanaikotidhu Yaazhkotu Sevvidhu Aaangkanna
Vinaipatu  paalaal kolal"




Comments

Popular Posts