பிணியின்மை செல்வம் விளைவின்பம்....



பிணியின்மை செல்வம் விளைவின்பம்...

"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து "

                  குறள் : 738

பிணி _ நோய்
இன்மை _ இல்லாதிருத்தல்
செல்வம் _ பொருள் 
விளைவு _ விளைச்சல்
இன்பம் _ மகிழ்ச்சி
ஏமம் _ பாதுகாப்பு
அணி _ அணிகலன் , அழகு
என்ப _ என்று சொல்லுவர்
நாட்டிற்கு_ நாட்டுக்கு
இவ்வைந்து _ இந்த ஐந்தும்


நோயில்லாதிருத்தல், செல்வம் ,மிகுதியான விளைச்சல், 
மகிழ்ச்சியான வாழ்வு, நல்ல பாதுகாப்பு
ஆகிய இவை ஐந்தும் 
ஒரு நாட்டிற்கு அணி எனப்படும்.


விளக்கம் : 

1. நோயின்மை:

ஒரு நாட்டின் குடிமக்கள் அனைவரும் 
எந்தவித நோய்நொடியும் இன்றி 
வாழ்தல் வேண்டும்.

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் "
நோயில்லா வாழ்க்கையே இன்ப
வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்கும்.

2. செல்வம்.:

பணம் புழக்கம் தாராளமாக
இருக்க வேண்டும்.
செல்வம் மிகுதியாக
கிடைக்க வேண்டும்.
அப்போதுதான் நாட்டில் பசிப்பிணியோ
 வறுமையோ  இருக்காது.
அனைவர்க்கும் கல்வி கிடைக்க
வேண்டும்.
பொருட்செல்வமும்  கல்விச் செல்வமும்
இருந்தால்தான் நாடு வளர்ச்சிப் பாதையை
நோக்கிச் செல்ல முடியும்.

3. நல்ல விளைச்சல் :

வேளாண் தொழில்கள்மூலம் 
நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டும்.
அதனால் உழைப்பவர்க்கும் அதனை 
கொண்டு சேர்க்கும் வணிகர்களுக்கும்
நல்ல பலன் வந்து சேரும்.
அதோடு மட்டுமல்லாமல்
உற்பத்திப் பொருட்கள் பெருகும்.
வேலைவாய்ப்பு அதிகமாகும்.
மக்கள் கையில் பணப்புழக்கம்
ஏற்படும்.

4.  இன்பம்:

இன்பம் என்பது மகிழ்ச்சி.
மகிழ்ச்சி எப்போது ஏற்படும்.?
பொருளாதாரத்தில் தன்னிறைவு 
ஏற்படும்போது இயல்பாகவே
வீட்டிலும் நாட்டிலும் மகிழ்ச்சி
ஏற்பட்டுவிடும். நாம் நிறைவாக
வாழ்கிறோம் என்ற நம்பிக்கை
மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.


5.. பாதுகாப்பு :

பாதுகாப்பு உணர்வு ஏற்பட வேண்டும்.
மன்னன் நம்மை பாதுகாத்துக் கொள்வான்
என்ற நம்பிக்கை ஏற்படும்போதுதான்
குடிமக்கள் நிம்மதியாக வாழ முடியும்.

பகைவர் அஞ்சும் வகையில் 
படையானது பாதுகாப்பு அரணாக 
இருந்து செயல்பட வேண்டும்.

"நோயின்மை, செல்வம், விளைச்சல்,
இன்பம் மற்றும் பாதுகாப்பு 
ஆகிய ஐந்தும் நாட்டிற்கு
அணி "என்கிறார் வள்ளுவர்.

 இந்த ஐந்தும் உள்ள நாடுதான் 
மக்கள் வாழ்வதற்கு உகந்த நாடு .
 அனைவராலும் விரும்பப்படும் 
அழகிய நாடாகவும் இருக்கும்.

இதில் எது ஒன்று குறைபட்டாலும்
நாட்டு மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி
இருக்காது.அது நாடு எனப்பட மாட்டாது
என்பது வள்ளுவர் கருத்து.

English couplet :

"A country's jewels are these five:unfailing health,
Fertility ,and joy, a sure defence and wealth"

Explanation :

Freedom from epidemics , wealth, production, happiness
and protection to subjects these five 
are the  ornaments of a kingdom.

Transliteration : 

"Piniyinmai selvam vilaivinpam Emam
Aniyenpa Naattiv vaindhu"

Comments

  1. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பொருத்தமான வள்ளுவரின் குறள் போற்றத்தக்கது.அதை பதிவிட்ட ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நாட்டிற்கும் நமக்கும் நல்லது . நன்றி. வாழ்த்துக்கள். மேலும் பல தகவல்கள் பதவிடவும்.

    ReplyDelete
  3. Excellent explanation for the particular kural. Good job Selvabai.

    ReplyDelete

Post a Comment

Popular Posts