பீவர் மூன் என்றால் என்ன

 பீவர் மூன் என்றால் என்ன


முழுநிலவு நாளில் நிலவானது தனது சுற்றுப்பாதையில்  பூமிக்கு அருகில் வரும்போது   அதன் தோற்ற அளவு வழக்கமான முழு நிலவுடன் ஒப்பிடுகையில் சுமார் 14% அதிகமாகவும், 30% அதிக பிரகாசத்துடனும் காணப்படும் . அதனை சூப்பர் மூன் அதாவது பீவர் மூன் என்று அழைப்பர்.

இந்த பீவர்  மூனை இந்தியாவில் நவம்பர் 5 அன்று மாலை 6:30 மணியிலிருந்து காண முடியும் என வானியலாளர்கள் கூறியுள்ளனர். இந்த நிலவானது 

மாலை 6 மணி 49 வது நிமிடத்தில்

உட்சபட்ச பிரகாரத்தினை அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


 இதனை பார்ப்பதற்கு டெலஸ்கோப் போன்ற சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை.

வானம் தெளிவாக தெரியும் திறந்த வெளி மைதானங்கள்,

வீட்டு மாடி அல்லது உயர்வான மலைப் பகுதிகளில் நின்று வெறும் கண்களால் எளிதாகக் கண்டு களிக்கலாம் என்று சொல்கின்றனர்.



மாசு குறைவாக உள்ள பகுதிகளில் வானம் தெளிவாக மேகமூட்டமின்றி காணப்படும்.

அந்தப் பகுதிகளிலிருந்து பார்க்கும் போது, நிலவு இன்னும் தெளிவாகவும் அழகாகவும் தெரியும். , நிலவு உதிக்கும் நேரத்தில் அடிவானத்தில் இருக்கும் பொருட்களுடன் ஒப்பிடும்போது அது மிகப் பெரியதாகத் தோன்றும். இது கண் மயக்க காரணமாக ஏற்படும் இயல்பான தோற்றம் என்று வானியலாளர்கள் கூறுகின்றனர்.


நவம்பர் மாதம் தோன்றும் இந்த முழுநிலவு பீவர் மூன் என அழைக்கப்படுவதில் ஏதோ ஒரு வேறுபாடு இருப்பதாக தோன்றலாம்.

இதற்கு பீவர் மூன் என்று அழைக்க ஒரு காரணம் இருக்கிறதாம்.


இந்தப் பெயர் வட அமெரிக்க பழங்குடி மக்களின் பாரம்பரியத்தில் இருந்து வந்ததாகக் கூறுகின்றனர்.


குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னர் பீவர்ஸ்  அதாவது நீர்நாய்கள் தங்களை

குளிரியிலிருந்து  பாதுகாப்பதற்காக அடர்த்தியான ரோமத்தை வளர்க்குமாம். 


அதுமட்டுமல்லாது நீர்நாய்கள்  குளிர்காலத்தில் தங்களுக்குப்

பாதுகாப்பான  இடங்களை அமைக்கும் பருவ காலமும் இது என்று கூறப்படுகிறது .

இந்தப் பருவ காலத்தில் தோன்றும் மிகப் பிரகாசமான நிலவு என்பதால் 

அந்தப்பகுதி மக்கள் அதையே காரணமாக வைத்து  பீவர் மூன் என்று அழைத்திருக்கின்றனர்.

காலப்போக்கில் உலகெங்கும் பீவர் மூன் என்றப் பெயர் உச்சரிக்கப்படலாயிற்று.


நிலவு பூமிக்கு மிக அருகில் வருவதால், கடல் நீரின் மீது அதன் ஈர்ப்பு விசை சற்றே அதிகரிக்கும். இதனால் கடலில் ஏற்படும் உயரலைகள் வழக்கமான அளவை விட சற்றே உயரமாக இருக்கும். 


வானிலை தெளிவாக இருந்தால், இந்தியா முழுவதும் இந்த அழகிய  நிகழ்வை அனைவரும் காணும் வாய்ப்பு உள்ளது

என்று சொல்லப்பட்டுள்ளது.

 நிலவு அந்த இரவு முழுவதும் நிலவு மிகவும் பிரகாசமான நிலையில் இருக்கும். என்பதால், புகைப்பட ஆர்வலர்களுக்கும் வானியல் ஆர்வலர்களுக்கும் இது ஒரு அரிய அனுபவமாக இருக்கும்.


2025ஆம் ஆண்டின் கடைசி மிகப் பெரிய முழுநிலவு என வானியல் மையங்கள் தெரிவித்துள்ளன. வானம் தெளிவாக இருந்தால் இன்று அதாவது நவம்பர் 5 மாலை வானத்தை நோக்கிப் பார்த்து மகிழுங்கள் .


இயற்கையின் அதிசயங்களில் ஒன்றான பிரம்மாண்டமான பீவர் மூன் காட்சியைக் கண்ட மகிழ்வு உங்கள் நெஞ்சில் என்று நினைவாய் நிறைந்திருக்க வாழ்த்துகள்.

 

Comments