சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்....


சொல்லுதல் யார்க்கும் எளிய.....

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் "
                                   குறள்.  :       664

சொல்லுதல் _சொல்ல முற்படுதல்
யார்க்கும் _  எவர்க்கும்
எளிய      _எளிமையான செயல்
அரியவாம் _மிகக் குறைவு, அரிதான செயல்
சொல்லிய வண்ணம் _ சொன்னபடி
செயல் _செய்து முடித்தல்

ஒரு செயலைப் பற்றிப் பெருமையாகப்
பேசுவது எளியது. ஆனால் சொல்லியபடி 
செய்து முடிப்பது அரிது.

விளக்கம்:

இப்படிச் செய்யலாம் அப்படிச்செய்யலாம்
என்று எளிதாகப் பேசிவிடலாம்.ஆனால்
தான் சொல்லியபடி எல்லோராலும்
செய்து முடிக்க முடியுமா என்றால்...பெரும்பாலும்
கேள்விக்குறியாகவே இருக்கும்.
அழகாகப் பேசலாம்.பேசிய வண்ணம்
செயல் இருக்குமா...இருப்பது எல்லா
இடங்களிலும் சாத்தியமா...கடினம்தான்.
செயலில் உறுதி உடையவர் மட்டுமே
செயல்பாட்டில் வெற்றி காண முடியும்.

உறுதியும் செய்து முடிக்க வேண்டும்
என்ற மனோதிடமும் உள்ளவர் மட்டுமே
தான் சொன்னபடி செய்து முடிப்பார்.
மற்றவர் பேச்செல்லாம் வெறும்
வாய்ச்சவடாலாக மட்டுமே இருக்கும்.
சிலரின் சொல்லுக்கும் செயலுக்கும் மிகப்பெரிய
வேறுபாடு இருக்கும்.
உரைத்தலிலும் ஒழுகுதல் சிறந்தது.
சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு
இருத்தல் கூடாது. 
ஊருக்குத்தான் உபதேசம் என்பது போல்
இருத்தல் கூடாது.
சொன்னால் சொல்லிய வண்ணம்
செய்து முடிக்க வேண்டும் என்பதை
வலியுறுத்துகிறது இந்தக் குறள்.
சொல்லுதல் யார்க்கும் எளிது. ஆனால்
சொல்லியபடி செய்து முடிப்பது அரிது
என்கிறார் வள்ளுவர்.

English couplet : 

Easy to every man the speech that shows the way ;
Hard thing to shape one's life by words they say!

Explanation : 

To say (how to act is to be performed ) is indeed easy for
any one; but it is difficult to do according to
what has been said.

Transliteration :

"Sollungal yaarukkum Eliya Ariyavaam
Solliya vannam seyal "




Comments

  1. தற்காலத்தில் அநேகர் ஊருக்குத்தான் உபதேசம் செய்கிறார்கள்.சொல்லிய வண்ணம் செயலை செய்து முடிப்பவர் சிலரே.அருமையான பதிவு.

    ReplyDelete

Post a Comment

Popular Posts