ஏதிலார் குற்றம்போல்.....

ஏதிலார் குற்றம்போல்....


"ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
 தீதுண்டோ மன்னு முயிர்க்கு "

                                                         குறள் : 190
ஏதிலார் _ அடுத்தவர்,பிறர்
குற்றம் _ தவறு,குறை
போல் _ போன்று
தங்குற்றம் _ தமது குறை
காண்கில் _ காணப்படுமானால்
பின் _ அதன் பிறகு
தீது _ தீமை
உண்டோ _இருக்குமோ
மன்னும் _நிலைபெற்று
உயிர்க்கு _ மனிதருக்கு, உயிர்களுக்கு

பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது
 குற்றத்தையும் எண்ணிப்
பார்ப்பார்களாயின் எந்தத் தீய குணங்களும் 
இல்லாமல் வாழ்வு
நிம்மதியாக அமையும்.

விளக்கம் :

அடுத்தவர் குற்றத்தைக் கண்டு குறை 
கூறுபவர்கள் தம்மிடமும் அதேபோன்று 
குறைகள் ஏதும் உள்ளனவா என 
எண்ணிப் பார்க்க வேண்டும்.
அப்படி பார்க்கும் பண்பு ஏற்பட்டால்
பிறர்மீது குற்றம் காணும் இயல்பு
மறைந்து போகும்.
நம்மிடமும் இன்னன்ன குறைகள் 
எல்லாம் காணப்படுகிறது 
என்ற உண்மை தெரியவந்தாலே 
பிறர்மீது குறை காண வேண்டும்
என்ற எண்ணமே எழாது.
இப்படிப்பட்ட நற்பண்புகளை வளர்த்துக்
கொள்ள வேண்டும்.
 
 நற்பண்புகள் வந்துவிட்டால் இவ்வுலகில் 
 வாழும் உயிருக்கு தீது ஏதும் ஏற்படுமா என்ன..

   English couplet :

"  If each his own as neighbours faults would scans
   Could any evil happen to living man."

 Explanation : 

If they observed their own faults as they 
observe the faults of others would happen to  men.

 Transliteration : 

 " Edhilaar  Kutrampol  Thangutrang Kaankirpin
  Theedhunto  Mannum Uyirukku "



        

Comments

Popular Posts