நகுதல் பொருட்டன்று நட்பு

            நகுதல் பொருட்டன்று நட்டல்

   "நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
   மேற்சென்று இடித்தற் பொருட்டு  "
                                       குறள் : 784

நகுதல்  _ சிரித்து மகிழ்தல்
பொருட்டன்று  _ என்பதற்காக   அல்ல
நட்டல் _ நட்பு கொள்ளல்
இடித்தல் _ கடிந்து சொல்லுதல்
பொருட்டு _ என்பதற்காக

விளக்கம் :

நட்பு செய்தல் என்பது ஒருவரோடு ஒருவர் நகைத்து 
மகிழ்வதற்காக  மட்டும் அன்று. வேண்டாத செயல்கள் 
செய்யும்போது எடுத்துரைத்து அவரைத் திருத்துவதற்கும்
உதவுவதாக இருத்தல் வேண்டும்.மிகுதியான தவறுகள்
 செய்து துன்பத்தில் மாட்டிக்கொள்ள விடாமல் தடுப்பதாக 
 இருத்தல் மட்டுமே உண்மையான நட்பாக இருக்க முடியும்.

 English Couplet :

Nor for laughter only friendship all the pleasant day,
  But for strokes of sharp reproving, when from
                                                  right you  stray "

Explanation : 

  Friendship is to be practised not for the purpose of
  laughing but for that of being beforehand in giving
  one another sharp rebukes in case of transgression.

Transliteration: 

" nakudhaR porullandru nattal  mikudhikkaN
 maeRsentu itiththaR poruttu "
   
        நட்பு என்பது வெறுமனே கூடி மகிழ்ந்து கை கோத்து
உடன் நடப்பதற்கும் உரையாடி மகிழ்வதற்கும்         
 கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியைப் பகிர்ந்து
 கொள்வதற்கும் மட்டும் இருத்தல் கூடாது. நண்பன்
 செய்யும் செயல்கள் அவனைத் தீய செயல்களில்
 கொண்டுவிட்டுவிடும் என்பதை அறிந்தால்
 அவன் அச்செயலைச் செய்வதற்கு முன்பாகவே 
 அதனைத் தடுத்து நிறுத்துபவனே நல்ல நண்பனாக
 இருக்க முடியும். அது இல்லாமல் நண்பன் மாட்டிக்
 கொண்டு விழிக்கும்வரை விட்டுவிடுபவன் நல்ல
  நண்பனாக இருக்க முடியாது.
 
இன்பத்தில் மகிழ்வதும் துன்பத்தில் தொலைந்து
போவதும் நட்பு அல்ல.

Comments

Popular Posts