நெல்லும் உயிரன்றே....

                  நெல்லும் உயிரன்றே....

 வாழ்க்கை வாழ்வதற்கே!
அந்த வாழ்க்கை எப்படி அமைய 

வேண்டும் என்று அனைவரும்

             ஒரு திட்டம் போட்டு வைத்திருப்போம்.
             ஆனால் நாம் திட்டமிட்டது போல் எல்லாம் நடை பெறுகிறதா....
             இடையில் எத்தனையோ குழப்பங்கள்... குளறுபடிகள்...
            
           பத்து மணிக்கு ஒரு இன்டர்வியூ போக வேண்டும். வழியில்  போராட்டக்காரர்கள் வந்து ஆட்டோவை வழி மறிக்க  குறிப்பிட்ட நேரத்தில் இன்டர்வியூக்குப் போக முடியவில்லை.
           மதிப்பெண்கள் இருக்கிறது. போதுமான எல்லா தகுதியும் இருந்தும் வேலை கிடைக்க முடியாத சூழ்நிலை.காரணம் அரசியல் குழப்பம்.
       அப்படியானால்  குழப்பமான அரசியலும் குடிமக்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது புரிகிறதல்லவா!
        வயிறார சாப்பிட போதுமான வசதி இருக்கலாம்.
        பயிர்த்தொழில் செய்து வசதி வாய்ப்பைப் பெருக்கிக் கொள்ள
         நாட்டில் நீர் வளம்  மிகுந்திருக்கலாம்.
         இவை எல்லாம் இருந்தாலும் நாடாளும் மன்னன் சரிி இல்லை என்றால் குடிமக்கள் வாழ்வில் நிம்மதி இருக்காது.
         இதனை உணர்ந்து நல்லாட்சி நடத்திடல் வேண்டும் என்கிறது புறநானூற்றுப் பாடல்.
          அரசின் மாட்சியே குடிமக்களுக்கு உயிர் போன்றது.
          வெளிபகை நீக்கி உட்பகை அடக்கி அமைதி பூங்காவாக நாட்டை ஆளும்  அரசன் வேண்டும்.
          
        இதைத்தான் ,
       
      "  நெல்லும் உயிரன்றே  ;  நீரும் உயிரன்றே
        மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
        அதனால் , யானுயிர் என்பது அறிகை
        வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே "

          என்று மோசிகீரனார்   பாடுகிறார்.
          மக்கள் சிறந்தவராயினும் ஆட்சி செய்யும் மன்னன் சிறப்புற ஆட்சி புரியவில்லை என்றால் நாட்டில் நிம்மதி இருக்காது.
         நல்ல படை பலம் உள்ள தானைத்தலைவா...கேள் .மக்களுக்குஉயிராக இருப்பதே நீதான்.நெல்லும்வாழ்வளிக்காது.நீரும் உயிர் கொடுக்காது .  அதை உணர்ந்து நல்லாட்சி கொடு என்பதை எவ்வளவு அழகாகக் கூறியிருக்கிறார் மோசிகீரனார்.
          "வயல் எல்லாம் நெல் விளைந்து
          வரப்புமீது கவிந்து கிடக்க
          வாய்க்காலெல்லாம் நீராறு ஓட
          வாய்த்த மன்னன்  மட்டும்
          வலிமையற்று கிடக்க
          வாய்க்குமோ நல் வாழ்க்கை
           வாள் வேந்தே ; வாழவை வேந்தே"

          என்று அறிவுரை கூறும் துணிவு
        புலவனைத் தவிர வேறு யாருக்கு வரும்?
        
        
       
            
     
            

Comments

Popular Posts