ஔவையின் ஆத்திசூடி ( ககர வருக்கம் )
ஔவையின் ஆத்திசூடி
( ககர வருக்கம் )
ஔவையார் எழுதிய ஆத்திசூடி எளிய பாடல் வரிகளைக் கொண்ட நீதி நூலாகும்.
இதில் மொத்தம் 109 வரிகள் உள்ளன.
பள்ளிப் பருவத்திலேயே படித்து மனதில் பதிய வைத்துக் கொள்ளும் வகையில் எளிமையான நல்லொழுக்கக் கருத்துகளைக் கொண்ட இப்பாடல்கள்
உயிர் வருக்கம்.
உயிர்மெய் வருக்கம்
ககர வருக்கம்
சகர வருக்கம்
தகர வருக்கம்
நகர வருக்கம்
பகர வருக்கம்
மகர வருக்கம்
வகர வருக்கம்
என்னும் பிரிவுகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.
ஆத்திசூடியில் ககர வருக்கத்தின்கீழ் வரும்
பன்னிரண்டு பாடல் வரிகளின் விளக்கத்தைக் இங்கே காணலாம்.
1 . " கடிவது மற. "
யாரையும் ஒருபோதும் கோபமாக கடிந்து பேசுதல் கூடாது.
Translation. :
Forget scolding others.
2 . " காப்பது விரதம் "
பிற உயிர்களுக்கு துன்பம் தராமல் அவற்றை காத்து ஒழுகுவதே விரதமாகும்.
Translation :.
Keep Up your vows.
3. "கிழமைப்பட வாழ்."
நம்மால் முடிந்த மட்டும் பிறருக்கு நன்மை செய்து வாழ்.
Translation. :.
Live your health and. Wealth do best to others.
4. " கீழ்மை அகற்று."
கீழ்த்தரமான செயல்களை செய்வதை தவிர்த்துவிடு.
Translation. :
Stay out of vulgar actions.
5. " குணமது கைவிடேல். "
நல்ல குணங்களை ஒருபோதும் கைவிட்டு விடாதே.
Translation. :.
Don't give up good character.
6. " கூடிப் பிரியேல். "
நன்மக்களோடு கொண்டுள்ள நட்பை கைவிடக் கூடாது.
Translation : Don't. Forsake friends.
7. "கெடுப்பது ஒழி. "
பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களைச் செய்யாதே.
Translation: Do not involve in actions that creates trouble for others.
8. " கேள்வி முயல்."
கற்றறிந்த சான்றோரிடம் நூல் பொருளைக் கேட்டு அறிய முயற்சி செய்ய வேண்டும்.
Translation : Learn by questioning.
9. "கைவினை கரவேல்."
. நமக்குத் தெரிந்த கைவினை பொருட்களைச் செய்யும்போது அதனை மற்றவர்களிடம் மறைக்க வேண்டும் என்று நினைக்காதே.
Translation : Do not hide knowledge about handicrafts.
10. " கொள்ளை விரும்பேல்."
பிறர் பொருளை களவாட விரும்பாதே.
Translation : Don't swindle.
11. " கோதாட்டு ஒழி ."
தவறான விளையாட்டுகளை விளையாடாமல் இருக்க வேண்டும்.
Translation : Ban all illegal games.
12. " கௌவை அகற்று. "
வாழ்வில் ஏற்படும் துன்பங்களை நீக்கி இன்பமாக வாழ வேண்டும்.
Translation : Don't vilify.
Comments
Post a Comment