ஔவையின் ஆத்திசூடி

                        

                  ஔவையின் ஆத்திசூடி

                                (  பகர வருக்கம் )

    1   "பழிப்பன பகரேல்."

  பொருள்    :  பிறர் மனம் புண்படும் படியான பழிச்சொற்களைப் பேசாதே.
      
           Do not use bulgur language.
          
     2".பாம்பொடு பழகேல்."
    
   பொருள்    :     பாம்பிடமிருந்து எப்போதும் விலகியே இரு.
          
         Keep away from snakes.
        
    3. "பிழைபடச் சொல்லேல். "
   
     பொருள்  : தவறில்லாமல் தெளிவாகப் பேசு.
      
            Speak clear with no mistakes.
           
    4." பீடு பெற நில். "
 
      பொருள் :   பிறர் பெருமையாகச் சொல்லும்படியான செயல்களைச் செய்து பெருமையுடன் நில்.
      
           Others should honour your actions.
          
    5."  புகழ்ந்தாரைப் போற்றி வாழ்."
  

            பொருள் : உன்னைப் பாராட்டுபவரைச் சார்ந்து வாழ்.
           
       Protect those who appreciate you.
      

    6.  "பூமி திருத்தி  உண். "
  
           பொருள்  :  உழவுத் தொழில் செய்து உணவை பெறுவதற்கான வழிமுறைகளைச் செய்.
           
        Cultivate the land and feed.
       

    7.  "பெரியாரைத் துணைக் கொள்."
   
        பொருள் :  சான்றோர்களோடு இணக்கமாக  இருக்கப் பழகிக் கொள்.
         
           Seek help from old great and wise people.
          

    8." பேதைமை அகற்று."
  
         பொருள்   :  அறியாமையை அகற்று.
          
         Eliminate ignorance.
        
    9."  பையலோடு இணங்கேல்."
   
     பொருள்  :     அறிவில்லாதவரோடு இணக்கம் வைத்துக் கொள்ளாதே.

          Do not get along with fools.
         
    10. "பொருள்தனைப் போற்றி வாழ்."
   
        பொருள்    :  கையில் பொருள் வரும்போதே அதைப் பாதுகாத்து வைக்கக் கற்றுக்கொள்.
            
            Save wealth without wasting unnecessarily.
           
    11. "போர்த் தொழில் புரியேல்."
  
           பொருள்  : தேவையில்லாமல் துன்பம் தரும் காரியங்களில் ஈடுபடாதே.
           
           Avoid getting into unnecessary trouble scenarios.

Comments

Popular Posts