நச்சப் படாதவன் செல்வம்...

    நச்சப் படாதவன் செல்வம்....



"நச்சப் படாதவன்  செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று  "
               குறள்.     :       1008


நச்சப்படாதவன் _ விரும்பப்படாதவன்
செல்வம் _ பொருள்
நடுவூருள் _ ஊரின் நடுவே
நச்சுமரம் _ விஷத் தன்மை கொண்ட மரம்
பழுத்தற்று _ பழுத்தது போன்றது


ஒருவராலும் விரும்பப்படாதவன்கண் இருக்கும்
செல்வமானது ஊர் நடுவே நச்சு மரம் ஒன்று 
காய்த்து கனிகளைத் தந்து நிற்பதற்கு 
ஒப்பானதாகும்.

விளக்கம் : 

ஊர் நடுவில் ஒரு மரம்
பூத்துக் குலுங்கி கிடக்கிறது.
ஆனால் இலை, பூ ,பழம் 
எல்லாம் விஷத்தன்மை கொண்டது.
யாருமே பயன்படுத்திவிட  முடியாது.
யாருக்குமே பயனில்லா இந்த
மரம் பூத்தென்ன? 
காய்த்தென்ன ? 
காயாது இருந்தென்ன ? 

அது போன்றதுதான்
ஒருவருக்குமே உதவாதவன்
வீட்டில் நிறைய பொருள்
வைத்திருக்கிறான்.
யாருக்குமே உதவுவது இல்லை.
என்ன பயன்? 
அவனிடம் பொருள் இருந்தென்ன? 
இல்லாமல் போயென்ன ?

ஏழைக்கு உதவாதவனுடைய செல்வம்
நச்சுமரம் பழுத்துக் கிடப்பதற்கு
ஒப்பானது என்கிறார் வள்ளுவர்.

English couplet : 

When he whom no man loves exults in great prosperity,
'Tis as when fruits in midmost of the town some poisonous tree.


English explanation : 

The wealth of him who is disliked by all is like the fruit bearing 
Of the etty tree  in the midst of a town.

Transliteration. : 

"  Bachchan pataadhavan selvam Natuvoorul
  Nachchau marampazhuth thattu "

Comments

Popular Posts