ஒழுங்கு

                       ஒழுங்கு

அனைவருக்கும் ஒழுங்கின்மீது அலாதி பிரியம் உண்டு.
  ஒழுங்காக வைப்பதில்தான் சிக்கல்.
  யாராவது ஒழுங்கு படுத்தித் தரமாட்டார்களா
  என்று நினைப்போம்.
  வீட்டிற்கு யாராவது வந்தால் கண்கள்
  முதன் முதலாக வீட்டில் எல்லாம் சரியாக
   வைக்கப்பட்டிருக்கிறதா  என்றுதான் பார்க்கும்.
  பொருட்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக
கிடந்தால் முதன் முதலாக அவற்றை சரிபடுத்திவிட்டுதான் 
கதவையே திறப்போம்.
   இதற்குக் காரணம் பிறர் நம்மைப் பற்றித் தப்பாக   நினைத்துவிடக்கூடாதே என்ற பயம்.
  
  ஆமாங்க...நம்மைப் பற்றிய நல்லெண்ணம்
  ஏற்படுவதற்குக் காரணம்
  நாம் வீட்டை வைத்திருக்கும்
  நேர்த்தியில்தான் கணிக்கப்படும்.

  அழகின் மறுபெயர் ஒழுங்கு.
 
நெல்சன் ஒரு நல்ல எழுத்தாளர்.அழகை ஆராதிக்கிறவர்.
தாம் இருக்கும் இடம் நேர்த்தியாக இருக்க
வேண்டும் என்று எண்ணுவார்.
அவருடைய அறையில் புத்தகங்கள் யாவும்
அதனதன் இடத்தில் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருக்கும்.
" ஒழுங்கு மனமகிழ்ச்சியைத் தருவதோடு
அமைதியையும் கொடுக்கும்
சிந்தனை சக்தியைப் பெருக்கும்.
கற்பனை வளத்தைக் கூட்டும்.
உன் வீட்டில் குவிந்து கிடக்கும் குப்பைக் குவியல்
உன் மனதின் தாறுமாறான எண்ணக் குவியலின் பிரதிபலிப்பு
."என்பார்.

  குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும் பாதையில்
  பயணம் இனிமையாக இருப்பதில்லை.
  தாஜ்மகாலின் நேர்த்தியும் அதன் ஒழுங்கும்
  நம்மை இன்றுவரை கவர்ந்திழுக்கிறது.
 
  ஒழுங்கு என்பது ஒரு நியதி .
  இதை இப்படித்தான் செய்ய வேண்டும்.
  இதை இங்கேதான் வைக்க வேண்டும்
  இந்த காரியத்தை இத்தனை மணிக்குள்
  முடித்துவிட வேண்டும்.
  இப்படி செய்யும் செயல்கள் யாவற்றிலும்
  ஒரு ஒழுங்கை கடைபிடிக்கும்போது யாவும்
  நேர்த்தியாக  வெற்றிகரமாக முடிக்கப்படும்
.
 
படிக்கும் பிள்ளைகள் புத்தகங்களைப்
பைக்குள் வைப்பதில் கூட ஒரு நேர்த்தி இருக்க வேண்டும். நோட்டுபுத்தகத்தில் எழுதும்போது ஒரு ஒழுங்கு வேண்டும்.
வீட்டிற்கு வந்ததும் எல்லாவற்றையும்
அதனதன் இடத்தில் வைக்கும் பாங்கு வர வேண்டும்.
இவை யாவும் மாணவன் மேல்  நல்ல
எண்ணம் உருவாக வழிவகுக்கும்.
  
சிறுபிள்ளையிலிருந்தே ஒழுங்கு கடைபிடிக்கப்படும்போது
  அது பெரியவர்கள் ஆன பின்னரும் தொடரும்.
    தொடர்ந்து செய்யப்படும் எந்த செயலும்
    பழக்கமாகிப் போகும்.
   பழக்கம் வழக்கமானால் அது நல்லபழக்கமாக மாறும்.

  
  அதென்ன பெரிய ஒழுங்கு ...பொல்லாத ஒழுங்கு .
  கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
   கால் கை ஒரு ஒழுங்கில்லாமல் கண்டமேனிக்கு
   வளர்ந்துவிட்டால் அது வளர்ச்சியாகுமா ?
    கை கால்கள் ஒழுங்காக செயல்படாவிட்டால்
    அது நிறைவானதாக இருக்குமா!
    கை வடக்கிலும் கால் தெற்கிலும் இழுத்துக்
    கொண்டு நின்றால் என்ன நடக்கும் ?
   
    எந்த உறுப்பானாலும் அதற்கான செயலை
    ஒழுங்காக செய்ய வேண்டும்.
    மூளையின் கட்டுப்பாட்டின்படிதானே
     எல்லா உறுப்புகளும் இயங்குகின்றன.
    அவை ஒரு சீராக நடைபெறாவிட்டால்....
    செயல்கள் யாவும் தாறுமாறாகப் போய்விடுமே !
    இந்த ஒழுங்குதாங்க ஒழுக்கம்.
    ஒழுங்கிற்கும் ஒழுக்கத்திற்கும் மிகப் பெரிய
    வேறுபாடு ஒன்றும் இல்லை.

   
  எதிலும் ஒரு விதிமுறையைக் கடைபிடித்து
  ஒழுகும் ஒருவனிடம் கண்டிப்பாக
  ஒழுக்க நெறிகள் மிகுந்திருக்கும்.
  அவன் நெறி தவற மாட்டான்.

 
  நடத்தை விதிகளுக்கு உட்பட்டு செயல்படும்
ஒருவனால் ஒருபோதும் தவறான பாதைக்குச்
  செல்ல முடியாது.
 
பள்ளிப்பருவத்திலேயே இந்த  ஒழுங்கு
கற்பிக்கப்பட வேண்டும்.

விளையாட்டு பாடவேளேயில் ஆசிரியர்
நிறைய ஒழுங்குகளைக் கற்பித்திருப்பார்.

  நிற்பதில்.... நடப்பதில்..... ஓடுவதில் .....
  இப்படி எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு
  கற்பிக்கப்பட்டிருக்கும்.

  அது விளையாட்டு பாடவேளைக்கு மட்டும் உரிய தல்ல.

நம் வாழ்க்கை முழுவதும் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்தான் பள்ளியில்
கற்பிக்கப்படுகின்றன.

  நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட
  பார்வையும் கூட ஒரு நேர்த்திதானே.

   நியதிகள் ஒழுங்குகளாக கடைபிடிக்கப்பட வேண்டும்.
        
  இயற்கை யாவும் நியதிக்கு உட்பட்டுதான்
  இயங்குகின்றன.

        
காலையில் சூரியன் உதிப்பதில் தொடங்கி
நடக்கும் யாவும் ஒரு ஒழுங்கிலேயே
நடைபெற்றுக் கொண்டிருக்கும்.    

பூ மலர்வதில் ஒரு ஒழுங்கு தெரிகிறது.

ஓடும் நதி அதன் போக்கில் ஒழுங்காக
செல்லும்போது நம்மை கட்டி

இழுக்கும் ஒரு ஈர்ப்பு சக்தி ஏற்படுகிறது.

  ஒழுங்கு கால விரயத்தைத் தடுக்கும்.
  பொருட்களை எங்கேயாவது
  வைத்துவிட்டு தேடும் போக்கு இருக்காது.
  

வீணான சண்டைகள் வராதிருக்கும்.

நம்மீது ஒரு    நல்ல அபிப்பிராயம் ஏற்பட
வழிவகுக்கும்.

எதிலும் ஒரு ஈடுபாட்டை உருவாக்கும்.

அழகு உணர்வைக் கூட்டும்.

மொத்தத்தில் ஒழுங்கு ஒழுக்கத்தைக்
கடைபிடிக்க உறுதுணையாக இருக்கும்.

ஒழுங்கும் ஒழுக்கமும் கூடியிருந்தால்
உங்கள் வெற்றிக்குத் தடையிடுவார் யார் ?

ஒழுங்கின்மையோடு  கொள்ளுங்கள் பிணக்கு.

ஒழுங்கோடு தொடங்கட்டும் உங்கள் வெற்றிக்கணக்கு.

   
    

Comments

Popular Posts