மருந்தாகி தப்பா மரத்தற்றால்....

   மருந்தாகி தப்பா மரத்தற்றால்....


"   மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் 
  பெருந்தகை யான்கண் படின் "
                                  குறள் :  217

மருந்தாகி _ நோய்தீர்க்கும் மருந்தாகி
தப்பா  _ தவறாது
மரத்தற்றால் _ மரம் போன்றது
செல்வம்  _  பொருள்
பெருந்தகையான்கண் _ பெருந்தன்மை உடையவனிடத்தில்
படின் _ சேர்ந்திருக்குமானால்

எல்லா நற்பண்புகளும்  கொண்டவனிடம் சேரும்
செல்வமானது ஒரு மரத்தின் எல்லா உறுப்புக்களும்
மருந்தாகப் பயன்படுவதற்கு ஒப்பாக இருக்கும்.

விளக்கம்  :

      செல்வம் எல்லா நற்பண்புகளும் கொண்டவனிடம்
சேர வேண்டும்.
அத்தகைய நற்பண்பு மிக்காரிடம்
செல்வம் இருப்பது என்பது ஒரு மரத்தின் 
இலை,  பூ    , காய் ,பழம், கொம்பு ,
வேர் ,பட்டை என அனைத்து உறுப்புகளுமே 
மருந்தாகப் பயன்படுவதற்கு ஒப்பானது ஆகும்.
  பெருந்தன்மை மிக்காரிடம் இருக்கும் செல்வமும் 
தேவைப்பட்டவர்களுக்குத் தேவைப்பட்ட 
வேளைகளில் உதவுவதாக இருக்கும். 
மரத்தின் உறுப்புகள் எவ்வாறு நோய்
தீர்க்க உதவுகிறதோ அதுபோன்று 
நற்பண்பு மிக்காரிடம் உள்ள செல்வம் 
பசிப்பிணி நீக்க உதவுவதாக இருக்கும்.
அதாவது பசிப்பிணி போக்கும்
நல்மருந்து அது என்கிறார் வள்ளுவர்.

English couplet: 

"Unfailing tree that healing balm distils from every part ,
Is ample wealth that falls to him of and Noble heart "


Explanation :

If wealth be in the possession of a man who has the great
Excellence of benevolence ,.it is like a tree  which has 
 a medicine is an infallible cure for disease.

Transliteration :. 

"  Marundhaakith thappaa Maraththatraal  selvam
  Perundhakai yaankan patin"



Comments

Popular Posts