தொட்டனைத் தூறும் மணற்கேணி....

    தொட்டனைத்தூறும் மணற்கேணி....

"   தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
   கற்றனைத் தூறும் அறிவு "
                                              குறள்   :  396




     தொட்டனைத்து  _   தோண்டிய அளவுக்கு
     ஊறும்   _  சுரக்கும்
     மணற்கேணி   _ ஊற்று
     மாந்தர்க்கு  _  மக்களுக்கு
     கற்றனைத்து  _  கற்ற அளவுக்கு
     ஊறும்   _  பெருகும்
     
 மணற்கேணியில்  தோண்ட தோண்ட
 நீர் சுரப்பது பெருகிக் கொண்டே இருக்கும்.
அதுபோல நாம் கற்கும் கல்வியின் அளவுக்கு ஏற்ப
அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.

விளக்கம் : 
     
 மணல் ஓடைகளில் எவ்வளவு ஆழம்
 தோண்டுகிறோமோ அதற்கு ஏற்ப
 நீரின் அளவு கூடிக் கொண்டே இருக்கும்.
 நீர் முழுவதும்  வற்றிப்போனாலும்
 மறுபடியும் மறுபடியும் மணலைத் தோண்டினால் 
 நீரூற்றிலிருந்து நீர் ஊறி, நீர்மட்டம்
 கூடுவதைக் காணலாம்.
 ஆழம் கூடக்கூட நீரின் அளவு 
 கூடுவதுபோல படிக்கப் படிக்க
அறிவு கூடும்.

எல்லோரிடமும் அறிவு உள்ளது.
அது மணலால் மூடப்பட்டுக் கிடக்கிறது.
நாம்தான் முயற்சி செய்து வெளிக்
கொணர வேண்டும்.
மூடப்பட்டுக் கிடக்கும் மணலை அள்ள அள்ள
நீர் மிகுதியாக கிடைப்பது இயல்பு.
அது போன்றுதான் அறியாமை 
என்னும் மணலால் மூடிக்கிடக்கும்
அறிவை வெளிக் கொண்டு வர
நல்ல புத்தகங்களைப் படித்தல் அவசியம்.
நாம் கற்கும் நூல்களின் அளவுக்கு
ஏற்பவே நம் அறிவு பெருகும் என்கிறார்
வள்ளுவர்.
 
 English couplet : 

" In sandy soil, when deep you delve, you reach the springs below;
 The more you learn , the freer streams of wisdom flow "
       
Explanation. : 
   
Water will flow from a well in the sand in proportion to the depth 
to which it is dug, and knowledge will flow from a man in proportion to his learning . 

 Transliteration. : 

 "  Thottanaith  Thoorum  manarkeni  maandharkkuk
   Katranaith thoorum arivu "




  
   
  

  

Comments

  1. அறியாமையை நீக்கி அறிவை வெளிக்கொணரும் வள்ளுவரின் கருத்தை ஆழமாக பதிவிட்டுள்ளீர்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts