யான்நோக்குங் காலை நிலன் நோக்கும்....


யான் நோக்குங் காலைநிலன் நோக்கும்....


யான்நோக்குங் காலைநிலன் நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்  "
                         குறள்  : 1094
                       
                          
 யான்  _  நான்
 நோக்குங்காலை  _  பார்க்கும் பொழுது
 நிலன் நோக்கும் _ நிலத்தைப் பார்க்கும்
நோக்காக்கால்  _  பார்க்காதபோது
தான்  நோக்கி _ தலைவனைப் பார்த்து
மெல்ல நகும் _  மெதுவாக புன்னகைக்கும்

நான் பார்க்கும்போது பாராததுபோல நிலத்தைப்
பார்ப்பாள்.நான் பார்க்காதபோது மெதுவாக 
என்னைப் பார்த்து புன்முறுவல் கொள்வாள்.

விளக்கம் :

தலைவன் பார்க்கும்போது தலைவி 
பார்க்க மாட்டாளாம்.பார்க்காததுபோல
வெட்கத்தால் நிலத்தைப் பார்த்துக்
 கொண்டிருப்பாளாம்.
தலைவன் அந்தப் பக்கம் திரும்பியதுதான் 
தாமதம் தலைவனைப் பார்த்து
மெதுவாக தனக்குள்ளே புன்னகைத்துக்
கொள்வாளாம்.

அப்படி சிரிக்கும்போது
பெண்ணுக்கே இயல்பாக வரும்
 நாணம் வந்து ஒட்டிக் கொள்ளுமாம்.

அதனால்தான் வள்ளுவர் மெல்ல நகும்
என்கிறார்.
மெல்ல நகும் எவ்வளவு அருமையான
 சொற்கள் பாருங்கள் !

  மெல்ல நகும் என்று சொல்லும்போதே 
  அந்தப்புன்முறுவலோடு 
 அந்தப் பெண்ணும் கூடவே நாணத்தோடு
 நம் கண்முன்
 வந்து நிற்பது போன்ற உணர்வு
 ஏற்படுகிறதல்லவா!

அருமையான காதல் காட்சியைப் 
படமாக்கிக் காட்டியிருக்கிறார்
வள்ளுவர்.

 
English couplet : 

"I look on her, her eyes are on the ground the while ,I look away,
She looks on me with timid smile "

Explanation : 


When I look she looks down, when I do not,
She looks and smiles gently.

Transliteration. : 

"Yaanokkum kaalai nilaannokkum nokkaakkaal
 thaannokki mella enakum "

Comments

Popular Posts