நாற்பது வயதில் நாய்க்குணம்


           நாற்பது வயதில் நாய்க்குணம்

நாற்பது வயதில் நாய்க்குணம்
    அறுபது வயதில் பேய்க் குணம்"
        என்பார்கள்.
        
         
 "நாற்பது வயதில் நாய்  குணம் அதை
 நாம் தெரிஞ்சு நடக்கணும்
 அறுபது வயதில்  சேய்  குணம் அப்ப
அனுசரிச்சு நாம் அணைக்கணும்
     
நேரத்துக்கு ஒரு புத்தி இருக்கும்
நிமிஷத்துக்கு ஒரு பேச்சிருக்கும்
எடுத்ததற்கெல்லாம் கோபம் வரும் கண்ணில்
எள்ளும் கொள்ளும் வெடிச்சிருக்கும்"

 இது கவிஞர் வாலியினுடையப் பாடல்.

ஆனால் நாற்பது வயதில் நா குணம் .
அதாவது நாற்பது வயதில் ஒரு முதிர்ச்சி
வந்துவிடும்.
அறுபது வயதில்  சேய் குணம்.
அதாவது சிறுபிள்ளை போன்று மாறி
விடுவராம் .இப்படி ஒரு விளக்கம்
கூறுவர்.
   
 நாற்பது வயதில் நாவை எங்கெல்லாம் 
 பயன்படுத்த வேண்டும் என்ற பக்குவம்
 வந்துவிடும்.
அதாவது பேசும் பக்குவம் வந்து விடும். 
 உலக அனுபவங்களை முழுதாக 
 தெரிந்து கொண்ட வயது நாற்பது வயது.
  அதனால்தான் நாற்பது வயதில் நா குணம் 
  என்று சொல்லி இருப்பார்கள்.
  அதைத் தவறுதலாக நாய்க் குணம் 
  என்று கூறி வருகிறோம் என்பது 
ஒருசாரார்  கருத்து.
  
ஒருவேளை சரியாகவே சொல்லி
இருந்தாலும் நாய்க்குணம் 
வருவதில் என்ன தப்பு.?
 இது பெருமைப்பட வேண்டிய செயல்தானே!

  நாய் என்ன வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய 
  விலங்கா...?
என்பது இன்னொரு தரப்பு வாதம்.
      
 கொஞ்சம் கத்தி பேசிவிட்டால் போதும்
  ஏன் நாய் மாதிரி கத்துற?...என்பார்கள்.
 அதுவும் நாற்பதுக்கு மேலே அப்படி கத்திவிட்டால்....
  நாற்பதுக்கு மேல நாய்க் குணம் 
என்று சும்மாவா
சொன்னாங்க ...
 உங்களை மாதிரி ஆட்களுக்காகத்தான் சொல்லியிருப்பார்கள்.
இது பல வீடுகளில் பேசும் பேச்சு.

 பெரும்பாலும் அப்பா சற்று
குரலை உயர்த்திப் பேசிவிட்டால்
இந்த வார்த்தைதான் முந்தி வந்து
நிற்கும்.
ஏம்மா அப்பா நாய் மாதிரி
கத்துறாரு...?இது இளைஞர்கள்
பேசும் பேச்சு.

பெரும்பாலும் அம்மாக்களைவிட அப்பாக்களுக்குத்தான் 
 இந்த நாய்க்குணம் இருப்பதாக சொல்லிக்
 கொண்டுத் திரிவர்.
 அதென்னவோ ஆண்கள் மட்டுமே கத்துவது
 மாதிரியும் பெண்கள் எல்லாம் 
 அமைதியானவர்கள் என்பது மாதிரியும்
 அப்படி ஒரு பிரம்மையை ஏற்படுத்தி 
 வைத்துள்ளனர் குழந்தைகள்.
 
 இப்படி  ஆண்களையே குறி வைத்து 
  சொல்லப்படும் குற்றச்சாட்டு 
சரியானதுதானா.?
 "பிறகு என்னங்க...எப்பவும் வள்ளு... வள்ளு 
  என்று கத்தினா அப்படித்தான் சொல்வாங்க..."
  என்று சொல்லி  பெண்கள்
 தங்கள் தரப்பு வாதத்தை
ஞாயப்படுத்த முற்படுவர்.

  "நீங்க சும்மா இருந்தால் நாங்க ஏன் கத்தப் போறோம்..."பாதிக்கப்பட்டவர்கள் 
பக்கமிருந்து வரும் பதில். 
 
 எனக்கு என்னவோ இரண்டு பக்கமும் 
 நியாயம் இல்லாதது போல்தான் 
 தோன்றுகிறது.
 பெண்களுக்கும் உடல் ரீதியான சில
  மாறுதல்கள் நடைபெறும்போது கோபம்
 வரத்தான் செய்யும்.அவர்களும் கத்தத்தான்
செய்வார்கள்.
இந்த கத்தல், கோபம்
எல்லாம் இருபாலாரிடமிருந்தும்
வெளிப்படும்.

 சரியான புரிதல் இல்லாததால்தான் 
 ஆளாளுக்கு இப்படி ஒருவரை ஒருவர்
குறை சொல்லிக்கொண்டு இப்படி 
சண்டை  போட்டுக் கொள்வர்.
 
 புரிதல் இல்லாததால் வருவதுதானே 
 சண்டை என்பீர்கள்.

அந்தப் புரிதல் இல்லங்க.
இந்தப் பழமொழியைப் பற்றிய சரியான
புரிதல் இல்லையோ?
அதனால்தான் பழமொழியைக்குத்
தவறான அர்த்தம் கற்பித்துப் பேசி
வருகிறோமோ என்று எனக்கு
ஒரு சிறிய ஐயம் உண்டு.


 இப்போது நாய்க்குணத்துக்கு வருவோம்.
 அதென்ன நாய்க்குணம்...?
 நாய்க்குக் குரைக்க மட்டும்தான் தெரியுமா...?.
 நாய்க்குணம் என்பதுதான் என்ன...?
நாய் வெறுத்து ஒதுக்கப்பட வேண்ஆடிய
விலங்கா?

இப்படி பல கேள்விகள் என்னுள்
எழுந்தது.
 
 நாய் நன்றி உள்ள விலங்குங்க.
 வீட்டைக் காக்கும் கடமையும் பொறுப்பும் 
 தனக்கு இருக்கிறது என்று
 சதா வீட்டு வாசலிலேயே காத்துக் கிடக்கும்.
 தூங்குவதுபோல் கிடக்கும். 
 ஆனால் தூங்காது.
 தன்னைச் சார்ந்தவர்களுக்கு ஒன்று
 என்றால் விட்டுக்  கொடுக்காது. 
 துரத்தித் துரத்தி குரைக்கும்.
கடிக்கவும் அஞ்சாது.
 இதுதாங்க நாய்க்குணம். 
          
 இந்தப் பக்குவமும் பொறுப்பும்
உள்ள ஒரு நாயின் குணம் ஒரு 
மனிதனுக்கு வருவது
நாற்பதாவது வயதில் தாங்க.

தூங்கினால் தூக்கம் வராது.
பிள்ளைகள் பற்றிய நினைப்பு மனதுக்குள் 
வந்து தூங்கவிடாது.
இதுநாள்வரை பொறுப்பில்லாமல் இருந்திருப்போம்.
முழு கடமையையும் உணரும் வயதும்
நாற்பதாவது  வயதுதான்.    
இதுதாங்க இந்த பழமொழிக்கான 
பொருளாக இருக்கும்.

 பிள்ளைகள் கடைக்குள் சென்றால் 
 நாயாக கடை வாசலிலேயே  
காத்துக் கிடப்போம்.
 பள்ளி வாசலில் மணிக்கணக்கில்
கால்கடுக்கக் காத்திருப்போம்.
 வீட்டிலுள்ளவர்கள் வெளியில் சென்று விட்டால் வரும்வரை நிம்மதி இல்லாது
வீட்டுக்கும் வாசலுக்குமாக நடையாய்
நடப்போம். 
  
 இந்தக் காத்திருப்பும் கடமை உணர்வும்
 மிகுந்திருக்கும் வயது நாற்பது வயது.
 அதனால் நாய்க்குணம் என்று 
சொல்லியிருந்தாலும் தப்பில்லை
 என்கிறார் ஒரு நாற்பது வயதுக்காரர்.

என்ன சொல்கிறார்... கேளுங்கள்.
                     
       நாற்பது வயது நரையோடு
       வந்து எட்டிப் பார்க்க
       முட்டிப் பார்த்துவிட
       வரிந்து கட்டினாள்
       என் தர்ம பத்தினி
       எட்டி நின்று எதிரிபோல் 
       பார்த்தனர் பிள்ளைகள்
       குட்டியாய் ஒரு முணுமுணுப்பு
       ஒதுங்கி நின்று
       ஓரக்கண்ணால் பார்த்து
      மெல்ல ஒரு நமட்டுச் சிரிப்பு
       எனக்கு நாய்க் குணமாம்
       சட்டிப்பானை உருட்டும்
       குருட்டுப் பூனையென
       பெயர் தந்து
        துரட்டெடுத்து 
       துரத்தி விடாமல்
       நாய்க்குணம் என்றதில்
       எனக்கு பெரும் மகிழ்ச்சி!
       தூங்காமல் கிடப்பதால்
        நாய் என்னும் பட்டமாம்
         மனைவி மக்களுக்காய்
        காத்துக் கிந்ததால்
        கிடைத்ததிந்த சிறப்புப் பட்டம்
        பட்டம் கிடைத்ததில் 
        இல்லை எனக்கு வருத்தம்
        குடும்பத்திற்கு நான்என்றும் 
        பொறுப்புள்ள நாய்தான்
         நாற்பதில் என்ன !
        காலமெல்லாம் நாயாக
        வாழவே விரும்புகிறேன் ! 

எப்படி சொல்லிவிட்டார் பாருங்கள்!
இதுதாங்க நாநலம் கொண்ட
நா குணம் என்பது....!

             
                      

Comments

  1. வயதையும் குணத்தையும் ஒப்பிட்டுக் கூறிய விளக்கம் மிக அருமை.

    ReplyDelete
  2. Very good explanation and clarification. Her style of writing is excellent and creates interest in reading. Excellent teacher.

    ReplyDelete

Post a Comment

Popular Posts