விசும்பின் துளிவீழின் அல்லால்....

  விசும்பின் துளிவீழின் அல்லால்....

விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலை காண்ப தரிது "
                                      குறள்  :  16
விசும்பின் _ வானத்தின்
துளி _ மழைத்துளி
வீழின்  _  விழுந்தால்
அல்லால்  _ அன்றி 
மற்று _ அதன் பின்னர்
ஆங்கே _ அவ்விடத்தே
பசும்புல் _ பசுமையான புல்
தலை _  புல்லின் நுனி
காண்பது _  காணல்
அரிது _  அருமையானது, காணமுடியாது


வானத்திலிருந்து மழைத்துளி விழவில்லை 
என்றால் அவ்விடத்து ஒரு பச்சைப்புல் 
நுனியைக்கூட காண்பது அரிதாகிவிடும்.

விளக்கம் :
மழைத்துளி நிலத்தில் விழாவிட்டால் 
அவ்விடத்தில் உயிர் வாழ்க்கைக்குத் 
தேவையான நீர் இல்லாமல் போய்விடும்.
புல் பூண்டு முளைப்பது அரிதாகிவிடும்.
புல் பூண்டே முளைக்காதபோது
மனிதன் வாழ்வது எப்படி?
மனித வாழ்க்கைக்குத் தேவையான 
உணவு கிடைப்பது எப்படி? 
மழை இல்லை என்றால் உணவு இல்லை.
உணவு இல்லை என்றால் உயிர்
இல்லை.
உயிரினங்கள் அனைத்துமே பயிர்களைச் 
சார்ந்தே வாழ்கின்றன. பயிர்கள்
மழையைச் சார்ந்து வாழ்கின்றன.
பயிர்களை உண்டு வாழும் விலங்குகள்
விலங்குகளை உண்டு வாழும்
பெரிய விலங்குகள் என்று எல்லாமே
ஒரு சங்கிலித்தொடரில்தான் இயங்கி
வருகின்றன.
இந்த இயக்கம் நடைபெறாது
அழிந்து போய்விடும்.

உயிர்வாழ்க்கை மழையைச்
சார்ந்தே உள்ளது .
இப்படி சாதாரணமாகச்
சொல்லிவிட்டு வள்ளுவர் கடந்து செல்லவில்லை.
பசும்புல் தலையையே காணமுடியாது.
பசும்புல்லே இல்லை என்றால்
 மற்ற மரஞ்செடி கொடிகளும் இல்லாமல்
 போய்விடும் .
 வான்மழை இன்றி வாழ்வு இல்லை.
 
 மொத்தத்தில்  நீரின்றி அமையாது உலகம்
  என்பதை மனதில் பதிய வைக்க 
  பசும்புல்லையும் விசும்பையும்
  முடிச்சுப் போட்டு சொல்லி
  மற்ற நிகழ்வுகளை எல்லாம்
  நீங்களே ஊகித்து அறிந்து கொள்ளுங்கள்
  என்று நம்மிடமே விட்டுவிட்டார்
  வள்ளுவர்.
  
 
 English couplet : 

"If from the clouds no drops of rain are shed
'Tis rare to see green herb lift up its head."

Explanation : 

If no drop falls from the clouds, not even the
green blade of  grass will be seen .

Transliteration: 

"visumpin thuLiveezhin allaalmaR Raange
pasumpul thalaikaaN paridhu "



      

Comments

Popular Posts