பிழையின்றி எழுதுவோம்
பிழையின்றி எழுதுவோம்
"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் "
ஒரு செயலை இவ்வாறு செய்யலாம்
அவ்வாறு செய்யலாம்
என்று சொல்வது எல்லோர்க்கும் எளிது.
ஆனால் சொல்லிய வண்ணம்
செய்து முடித்தல் அரிது
என்கிறார் திருவள்ளுவர்.
இப்படி எழுதலாம் ...அப்படி எழுதலாம் ...
என்று ஆயிரம் அறிவுரை கூறலாம்.
எழுதும்போது அங்கும்
இங்கும் இடிக்கும்....
அடித்துத் திருத்தி திருத்தி முடிவாக
எதுவாகவும் இருந்துட்டு போகட்டும் ....
என்று சலிப்பாக எழுதி முடிப்போம்.
அதுவா இருக்குமோ... இதுவா இருக்குமோ
என்று நமக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்
சொற்கள் பல உண்டு.
அவற்றுள் ஒரு சில சொற்களைப் பற்றி அறிந்து
கொள்வோம்.
பொருத்து , பொறுத்து
இந்த இரண்டு சொற்களும் நம்மை மிகவும்
குழப்பமடையச் செய்யும்
பொருத்து என்றால் ஒன்று சேர் என்று பொருள்.
பொறுத்து என்றால் தாங்கிக் கொள்ளுதல் ,
ஏற்றுக் கொள்ளுதல் போன்ற
பொருள்களில் பயன்படுத்தப்படும்
சொல்லாகும்.
என்னைப் பொறுத்தமட்டில்
என்று எழுதும்போது வல்லின றகரம்
பயன்படுத்த வேண்டும்.
என்னைப் பொருத்தமட்டில் என்று
எழுதுவது தவறு.
இந்த இரண்டு சட்டங்களையும்
பொருத்த வேண்டும் என்று எழுதும்
போது இடையின ரகரம் பயன்படுத்த
வேண்டும்.
உளமார, உளமாற
உளமார என்று எழுத வேண்டுமா ?
உளமாற என்று எழுத வேண்டுமா ?
இவையும் நம்மை குழப்பமடைய வைக்கும்
சொற்கள்தான்.
உளமாற என்றால்
உள்ளம் + மாற என்று ஆகிறது.
மாற என்றால் மாறுபாடு, மாற்றம் என்று
பொருள்படும்.
அப்படியானால் உளமாற என்று
எழுதுவது தவறு.
உளமார என்றுதான்
எழுத வேண்டும்.
மனமார வாழ்த்துகிறேன் என்று எழுதுங்கள்.
மிகவும் ஏற்புடையதாக இருக்கும்.
மனமாற என்று எழுதிவிட்டால் மனம்
மாறுபட்டு என்று பொருள் கொள்ளப்படும்.
அளப்பரிய, அளப்பறிய
அளப்பரிய சரியா?
அளப்பறிய என்று எழுதுவது சரியா?
குழப்பமடைய வேண்டாம்.
அடிச்சொல்லையும் விகுதியையும்
பிரித்துச் சொல்லிப் பாருங்கள்.
பெரியதாக என்று சொல்லவேண்டும்.
அப்படியானால் அளப்பரிய என்றுதானே
எழுத வேண்டும்.
அளப்பறிய என்பது தவறு.
கோவை , கோர்வை
கோவை சரியா?
கோர்வை என்று எழுதுவது சரியா ?
கோவை என்பது சரி.
கோர்வை என்றால் கை கோர்த்துக் கொள்ளுதல்
என்ற பொருளில் எழுதப்படும்.
கோவை என்பது தொடர்ச்சியாக எனப்
பொருள்படும்.
தொடர்ச்சியாக எழுத முடியவில்லை என்று
சொல்லும்போது கோவையாக எழுதமுடியவில்லை
என்றுதான் எழுதவேண்டும்.
கோவையாக என்பதுதான் சரி.
முன்னூறு , முந்நூறு
முன்னூறு, முந்நூறு எது சரி?
முன் + நூறு =முன்னூறு
அதாவது முன்னால் கொடுத்த
நூறு எனப் பொருள்படும்.
முந்நூறு என்றால்
மூன்று + நூறு = முந்நூறு
ஆதலால் முந்நூறு பழங்கள்.....இப்படி
எழுதுவதே சரி.
அருகாமை, அருகில்
அருகாமை என்றால் அருகில் இல்லாமை
எனப் பொருள்படும்.
அருகில் என்றால் பக்கத்தில் என்ற
பொருள் கொண்டதாகும்.
ஆதலால் அருகாமை என எழுதுவது தவறு.
அருகில் என்று எழுதுவதே சரி.
தேனீர், தேநீர்
தேநீர் என்றால் தேயிலை நீர் என்பதாகும்.
தேனீர் _ என்றால் தேன் போன்ற நீர்
எனப் பொருள்படும்.
தேனீர் என்று எழுதுவது தவறு.
தேநீர் கடை என்றுதான் எழுதி
வைக்கவேண்டும்.
உங்களுக்கு எழும் சந்தேகங்களைப்
பதிவிடுங்கள்.
மிகச்சிறப்பான பயனுள்ள பதிவு.
ReplyDelete