இன்னா செய்தாரை ஒறுத்தல்.....

    இன்னா செய்தாரை ஒறுத்தல்....


"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ்  செய்து விடல் "
                               குறள்  :  314 

இன்னா _  துன்பம் , தீங்கு
செய்தாரை  _  செய்தவரை
ஒறுத்தல்   _      தண்டித்தல்
நாண         _     நாணும்படியாக, வெட்கும்படியாக
நன்னயஞ்  _ நல்ல செயல் , நன்மை
செய்துவிடல் _ செய்து விட வேண்டும்
 
நமக்குத் தீமை செய்தவரைத் 
தண்டிப்பதற்கான ஒரே வழி 
என்னவென்றால் அவர் வெட்கித் 
தலைகுனியும் படியாக நன்மை 
செய்துவிடுதலே ஆகும்.

விளக்கம் : 

ஒருவர் நமக்குத் தீமை செய்துவிட்டார் என்றால்
 அதையே நினைத்து வருந்திக் கொண்டிருப்பதில்
 எந்த பயனும் இருக்காது.

 அதற்குப் பதிலாக நாமும் பழிக்குப் பழி என்று
 ஏதாவது செய்துவிட்டால் அது தீராப் பகையில்
  வந்து முடியும்.

 மன்னித்து விட்டோம் என்றாலும் அப்போதைக்கு 
 அந்தப் பிரச்சினை முடித்து வைக்கப்பட்டுவிடும்.

ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மாறாக
அவரே எதிர்பார்க்காதபடி ஒரு நன்மை
செய்துவிட்டோம் என்றால்...
அப்படியே கூனிக் குறுகிப் போய்விடுவார்.
நாளும் நாளும் நினைத்து நினைத்து
அவமானப்பட்டுப் போவார்.

ஆதலால் நமக்குத் துன்பம் செய்தவரைத்
தண்டிக்க வேண்டும் என்றால் நன்மை செய்து
விடுங்கள் என்கிறார் வள்ளுவர்.

இதற்கும் அசந்து போகாத 
 ஆட்களும் இருக்கலாம்.
அதெல்லாம் விதிவிலக்கு.
அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.
இது எனது கருத்து.

English couplet : 

"To punish wrong , with kindly benefits the doers ply;
Thus shame their souls; but pass the ill unheeded by "

Explanation : 

The proper punishment to those who have done evil
to you , is to put them to shame by showing them
kindness , in return and to forget both the evil and the 
good done on both sides.

Transliteration :

" Innaasey thaarai oruththal avarnaana
  Nannayanj cheydhu vitul "

Comments

Popular Posts