அருமை உடைத்தன்று அசாவாமை...

     அருமை உடைத்தன்று அசாவாமை...


அருமை உடைத்தன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்"
                                 குறள்  :  611

அருமை _ பெறுதற்கு அரிது
உடைத்து  _ உடையது
என்று  _  என்று எண்ணி 
அசாவாமை _  அயர்ந்து போகாமை ,சோர்வடையாமை
வேண்டும் _ இருக்க வேண்டும்
பெருமை  _  உயர்வு
முயற்சி _ முயலுதல்
தரும் _ உண்டாக்கும் , கொடுக்கும்


இது செய்வதற்கு அரிது என்று மனம்
தளர்ந்து போகக்கூடாது.
முயற்சி செய்தால் அதற்கான பெருமை
வந்து சேரும்.

விளக்கம் : 

செயல்பட    ஆர்வமாக இருப்பதே எல்லா
வெற்றிக்கும் ஆதாரமாக  இருக்கும்.
எனனால் முடியாது என்று தொடக்க
நிலையிலேயே ஒதுங்கி விடக்கூடாது.

என்னால் முடியாது என்ற தளர்வு
ஏற்படும்போது அதிலிருந்து ஓரு அடிகூட
முன்னோக்கி எடுத்து வைக்க முடியாது.
என்னால் முடியுமா என்ற கேள்வி மனதிற்குள்
எழும்போதே ஒரு தளர்ச்சி வந்துவிடும்.

எச்செயலையும் என்னால் செய்யமுடியும்
என்ற துணிவு கொண்டவரால் மட்டுமே
உயர்வு எய்த முடியும்.
மனதிற்குள் தடுமாற்றம் வந்து விட்டாலே
கூடவே தோல்வி வந்து தற்றிக் கொள்ளும்.

ஊக்கம் குறைந்துபோனால் தளர்ச்சி வரும்.
தளர்ச்சி வந்தால் தன்னம்பிக்கை குறையும்.
தன்னம்பிக்கை குறைந்தால் தோல்வியில் 
வந்து முடியும்.
மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால்
வெற்றி கிடைக்கும்.
இடைவிடா முயற்சி செய்து முடிப்பதற்கான
பேராற்றலைக் கொடுக்கும்.
செயலை முடிக்க இயலாது என்று
மனம் தளர்ந்து  வேண்டாம்.போக
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.

English couplet :

"Say not, 'Tis hard ' ,in weak , esponding hour,
For strenuous effort gives prevailing power "

Explanation :

Yield not to the feebleness which says, " this is too
difficult to be done " labour will give the greatness
Of mind which is necessary to do it .

Transliteration : 

"Arumai udaiththendru asaavaamai vaeNdum
Perumai muyaRchi tharum "

Comments

Popular Posts