செய்க பொருளை ...

     செய்க பொருளை....

"செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
 எஃகதனிற் கூரிய தில் "
                                          குறள் : 759

செய்க _ ஈட்டுக
பொருளை _  செல்வத்தை
செறுநர் _  பகைவர்
செறுக்கு _ ஆணவம், தருக்கு
எஃகு _ கருவி வகைகளுள் ஒன்று 
அதனின் _ அதுபோல
கூரியது _ கூர்மையானது
இல் _ இல்லை


ஒருவன் கண்டிப்பாக பொருளை ஈட்ட வேண்டும்.
நம் பகைவரின் ஆணவத்தை அழிக்கக்
கூடிய கூர்மையான ஆயுதம் 
செல்வத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.

விளக்கம் :

ஒருவன் உலகத்தில் நன்றாக வாழ 
வேண்டும் என்று விரும்பினால் 
ஏராளமாக பொருள் ஈட்ட வேண்டும்.
 பகைவரின் செருக்கை அறுக்க வல்ல
கூரிய ஆயுதம் ஒன்று உண்டென்றால் அது
பணம் ஒன்று மட்டுமன்றி வேறெதுவும்
இருக்க முடியாது.

பகைவருக்கு முன்னால் தலை நிமிர்ந்து
வாழ வேண்டும் என்றால்
அதற்கு ஒரே வழி பணம் சம்பாதிப்பது
 மட்டுமாக தான் இருக்கும்.
 பணத்தால் மட்டுமே பகையை 
 வெல்ல முடியும். ஆகையினால்
செய்க பொருளை என்று கட்டளையிடுவது
 போல கூறுகிறார் வள்ளுவர்.
 
இல்லானை இல்லாளும் வேண்டாள்...
 ஈன்றெடுத்த தாய் வேண்டாள்.
 செல்லாது அவன் வாய்ச்சொல்
 என்ற ஔவையின் வாக்கு இங்கு
 நோக்கத்தக்கது.
 
பணம் பண்ணுங்கள் .உங்கள் பகைவரை 
வெல்ல வேண்டுமா ?  பணம் பண்ணுங்கள்
என்பது வள்ளுவரின் அறிவுரை.
   
English couplet :

 "Make money !Foeman's insolence o'ergrown
  To lop away no keener steel is known "

Explanation : 
 Accumulate wealth ; it will destroy the 
 arrogance of your foes; there is
  no weapon sharper than it.

Transliteration : 

 " seyka poruLaich cheRunhar serukkaRukkum
  eqkadhaniR kooriya thil "

Comments

Popular Posts