நகல்வல்லர் அல்லார்க்கு.....


        நகல்வல்லர் அல்லார்க்கு.....


"நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்  "

                                 குறள்  :  999

நகல்வல்லர் _பிறரோடு ஒத்திசைந்திருத்தல்
அல்லார்க்கு _ இல்லாதவர்க்கு 
மாயிரு  _ மிகப் பெரிய
ஞாலம் _ உலகம்
பகலும் _  பகலிலும்
இருள் _ இருளில்
பாற்பட்டன்று _ மூழ்கியது போலாகும்

                                
பிறரோடு ஒத்திசைந்து வாழும் நற்பண்பு
இல்லாதவர்க்கு, இந்த உலகமானது பகல் 
பொழுதிலும்கூட இருளாகவே இருக்கும்.

விளக்கம் : 

பிறரோடு பேசிப் பழகி வாழ்தல் வேண்டும்.
அப்படி ஒரு நற்பண்பு வாய்க்கப் பெற்றால்
நம்மோடு பேச, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள 
 என்று எப்போதும் நம்மைச் சூழ யாராயினும்
 இருந்து கொண்டே இருப்பர்.
 
யாருடனும் அதிகம் கலவாமல் தனிமைப்படுத்திக்
கொண்டிருக்கும் மக்கள் மனதில் 
மகிழ்ச்சி இருக்காது. எப்போதும்
ஒரு விரக்தி இருக்கும்.
அவர்களுக்குப் பகலும் இரவுதான்.
ஒரு வெறுமை மட்டுமே சுற்றி இருக்கும்.

நாலுபேரிடம் இயைந்து வாழும்போது
மனதில் இயல்பாக மகிழ்ச்சி வந்து
குடி கொண்டுவிடும்.
யாருடனும் ஒட்டாத மனிதர்களிடம்
யார் வந்து ஒட்டிக் கொள்ள முடியும்.
இருள்தான் வந்து ஒட்டிக் கொள்ளும்
என்கிறார் வள்ளுவர்.

English couplet. : 

" To him who knows not how to smile in kindly mirth
 Darkness in daytime broods o'er all the vast 
 and mighty earth."

Explanation. :. 

"To those who cannot rejoice the  wide world is buried
darkness even in broad day light "

Transliteration : 

"  nakalvallar allaarkku maayiru Gnaalam
  pakalumpaaR pattandru iruL. "

Comments

Popular Posts