காக்கை கரவா கரைந்துண்ணும்.....

 காக்கை கரவா கரைந்துண்ணும்....

"காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ  ரார்க்கே உள "
                           குறள் :  527

காக்கை  _ காகம்
கரவா _  மறைக்காமல்
கரைந்து _ கூவி அழைத்து
உண்ணும் _ தின்னும்
ஆக்கமும் _ உயர்வும் ,வளர்ச்சியும்
அன்ன _ அது போன்ற
நீரார்க்கே _ தன்மை கொண்டவருக்கே
உள _ உள்ளன  ,  இருக்கின்றன

காகம் தனக்கு உணவு கிடைத்ததும் 
அதை மறைத்து வைக்காமல் தன் 
இனத்தைக் கூவி அழைத்து சேர்ந்து
உண்ணும்.அதுபோல 
 அப்படிப்பட்ட குணம் கொண்டவருக்கு 
 மட்டுமே உலகில் உயர்வு வந்து சேரும்.

விளக்கம் :

காகம் தனக்கு உணவு கிடைத்துவிட்டது
என்பதற்காக அதை மறைத்து வைத்து
உண்ணுவதில்லை.

தன் இனத்தைக் கூவி அழைத்து
அனைவரும் வந்த பின்னரே கூடி
அமர்ந்து உண்ணும்.
கூடி உண்ணும் நற்பண்பு காகங்களிடம்
இயல்பாகவே காணப்படும் நற்பண்பு.

அதுபோல செல்வம் கிடைத்த போது
அதனைத் தனக்கு மட்டுமே உரிய
பொருள் என்று கருதாது பிறருடன் 
பகிர்ந்து கொள்ளும் பண்பு 
ஒருவருக்கு இருத்தல் வேண்டும்.
பகிர்ந்து உண்ணும் நற்பண்பு
இருந்தால் மட்டுமே வாழ்வில்
உயர்ச்சி அடைய முடியும்.
சுற்றமும் நம்மை நாடி வரும்.

காக்கையைப் போல சுற்றம்சூழ
கூடி வாழ்தலே உயர்வான வாழ்க்கை.

தனக்கு செல்வம் வந்தவிட்டது என்று
பிறருக்குத் தெரியாமல் மறைத்து
வைக்காதே.
அப்படி மறைத்து வைத்தால் உன்னை
நாடி வருவோர் எவருமே இருக்க மாட்டார்.
உன் வளர்ச்சி உன்னைச்சுற்றி இருக்கும்
உறவுகளை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது.
நீ வளர வேண்டும் என்று விரும்பினால்
பகிர்ந்து உண்ணும் நற்பண்பை
வளர்த்துக்கொள் என்கிறார் வள்ளுவர்.

English couplet : 

"The crows conceal not, call their friends to come,then eat ;
Increase of good such worthy ones shall meet"

Explanation : 

The crows do not conceal their prey,but will call out for 
others to share with them while they eat it.
Wealth will be with those who show a similar
disposition (towards their relatives ).

Transliteration :

" Kaakkai karavaa karaindhunnum Aakkamum
 Annanee Raarkke ula "

Comments

  1. பகிர்ந்துண்ணல் நற்பண்பே.ஆனால் நடைமுறைப்படுத்துவது மிகச்சிலரே.

    ReplyDelete

Post a Comment

Popular Posts